ஏகாந்தம் பூசிய இரவின் பிற்பகுதியில்
சுவர்க்கோழியின் ரீங்காரமென
வதைக்கிறது உன் நினைவுகள்
விழிகள் இறுக மூடி,
"ஒன்றிரண்டு என எண்ணத்துவங்கு
தூக்கம் வரும் ”என்று நீ
சொன்னதாய் நினைவு.
எண்ணத்துவங்கும்போதெல்லாம்
உன் எண்ணத்தில் தொலைவது
வாடிக்கை ஆனதில்
இருள் வானம் வெளுத்து நீலமாய் ---
இமை ஓரம் சேர்ந்து பாரமாய்
வழிகிறது நேசத்தின் துளிகள்!

No comments:
Post a Comment